முல்லைத்தீவில் அரச உத்தியோகத்தரின் தங்க சங்கிலி திருட்டு
முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி, மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் புதுக்குடியிருப்பு உடையார் கட்டு குரவில் பகுதியில் இன்று (13.11.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் உடையார் கட்டு தெற்கு கிராம அலுவலகர் அலுவலகத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இருவர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியினை அறுத்து சென்றுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
சுமார் இரண்டு இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலியே இவ்வாறு கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதையடுத்து சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam