தென்னிலங்கையில் ஹோட்டலுக்கு சென்ற இளைஞர்கள் மீது தாக்குதல்
களுத்துறையில் ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற இளைஞர்கள் குழு மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரகம பகுதியிலுள்ள ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் உதவியாளர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞர்கள் மீது தாக்குதல்
இளைஞர் குழுவொன்று பொல்கொட பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தையும் அதனை சுற்றியுள்ள பகுதியையும் முன்பதிவு செய்து சுற்றுலாவுக்காக அங்கு சென்றுள்ளது.
இதன்போது, ஹோட்டல் உரிமையாளரின் உறவினர்கள் சிலர் நீச்சல் தடாகத்தையும் அதனைச் சுற்றியுள்ள பகுதியையும் தங்களுக்கு வழங்குமாறு ஹோட்டல் உரிமையாளரிடம் கூறியுள்ளனர்.
வாக்குவாதம்
பின்னர் இந்த ஹோட்டல் உரிமையாளர் குறித்த நண்பர்கள் குழுவிடம் ஹோட்டலை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனால் இரு தரப்பினர்களுக்கு இடையிலும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன் ஹோட்டல் உரிமையாளரும் பணியாளர்கள் சிலரும் இணைந்து நண்பர்கள் குழுவைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri
