அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கும் நெருக்கடி
அரசாங்கத்தின் குறைபாடுகளை மறைத்துக் கொள்வதற்காக அரச ஊழியர்கள் கடுமையான நெருக்கடி நிலைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரச சேவையின் மீதான நம்பிக்கை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரச சேவையாளர்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அரச சேவையின் மீது அரசாங்கத்துக்கு நம்பிக்கை கிடையாது. இதனால்தான் பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி அமைச்சில் முக்கிய பதவிகள் இன்று அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.
அரச சேவையை இல்லாதொழிக்காதீர்கள். அரச நிதியை கொள்ளையடிப்பதற்காகத்தான் அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது என்று குற்றஞ்சாட்டினார்கள்.
ஆனால், இன்று அரிசி இறக்குமதி செய்கின்றீர்கள். உரம் இல்லாத காரணத்தால் விவசாயிகள் இன்று வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். இதனைப் பற்றி பேசுவதற்கு இன்று யாரும் இல்லை.
வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கத்திடம் உள்ள திட்டம் என்ன? அரசியல் நிகழ்ச்சி நிரலில் இருந்துகொண்டு கைதுகளை முன்னெடுக்காதீர்கள்.
வரவு - செலவுத் திட்டத்தில் குறிப்பிட்ட முன்மொழிவுகளை செயற்படுத்துவதற்கு எவ்வித திட்டங்களும் அரசாங்கத்திடம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
