அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முடிவு சில ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ சுட்டிகாட்டியுள்ளார்.
எனினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்டத்தை பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ பாராட்டியுள்ளார். இது மிகவும் சரியான திட்டமிடல் எனவும் அவர் பாராட்டியுள்ளார்.
இதற்கிடையில், புதிய சுங்கச் சட்டத்தை அறிமுகப்படுத்துதல், தனியார் துறையுடன் இணைந்து ஏற்றுமதி மேம்பாட்டு மண்டலங்களை நிறுவுதல், கொழும்பு துறைமுகத்தில் இரண்டு முனையங்களை மேம்படுத்துதல் மற்றும் திருகோணமலையில் எண்ணெய் தொட்டிகளை மேம்படுத்துதல் போன்ற முடிவுகள் குறித்து தனநாத் பெர்னாண்டோ சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார்.
அரச ஊழியர்கள்
நிவாரண முயற்சிகளுக்காக 232 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்வது, அரசாங்கத்தின் கவனம் சமூகப் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் முடிவு சில ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அரசு ஊழியர்களின் சம்பளத்தை இந்த அளவுக்கு அதிகரிப்பது பொருளாதாரத்தின் மீது தாங்க முடியாத சுமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பள அதிகரிப்பு
வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வை பூர்த்தி செய்ய அரசாங்கம் மூன்று ஆண்டுகளுக்குள் 300 பில்லியன் ரூபாயைக் கண்டுபிடிக்க வேண்டும்.
எனினும் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டவைகள் மற்றொரு முக்கிய நேர்மறையான அம்சம் சந்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கும் முடிவுகள் இல்லாதது என்றும் தனநாத் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
