கோட்டாபய அன்று ஓடியிருக்காவிட்டால் இன்று உயிருடன் இருந்திருக்கமாட்டார்! - மொட்டு கட்சியினர் தெரிவிப்பு

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Rohitha Abeygunawardana Sri Lanka Politician Sri Lankan protests
By Rakesh Nov 25, 2022 08:41 AM GMT
Report

"கோட்டாபய ராஜபக்ச அன்று நாட்டை விட்டு போயிருக்காவிட்டால் இன்று உயிருடன் இருந்திருக்கமாட்டார்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கோட்டாபய ராஜபக்ச அன்று நாட்டை விட்டு போயிருக்காவிட்டால் இன்று உயிருடன் இருந்திருக்கமாட்டார் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்காது வேறு ஒருவர் பதவியேற்றிருந்தால் இந்த நாடு மயான பூமியாகியிருக்கும்."

கோட்டாபய அன்று ஓடியிருக்காவிட்டால் இன்று உயிருடன் இருந்திருக்கமாட்டார்! - மொட்டு கட்சியினர் தெரிவிப்பு | Gotabaya Sri Lanka Podujana Peramuna Rohitha

உயிருடன் இருந்திருக்கமாட்டார்

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ச பதவி வகித்த காலத்தில் அவர் போராட்டத்துக்கு முகம்கொடுக்க நேரிட்டார். மீரிஹானவில் உள்ள அவரின் வீட்டைச் சுற்றி வளைத்து ஆரம்பித்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்தைக் கைப்பற்றும் நிலைமைக்குப் போனது.

கோட்டாபய ராஜபக்‌ச அப்போது புதிய பிரதமரை நியமிக்க நடவடிக்கை எடுத்த போது பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ, சரத் பொன்சேகா, அநுரகுமார திஸாநாயக்க, டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் அந்தப் பதவிக்கு குறிப்பிடப்பட்டன.

இதன்போது நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இணங்கினோம். அனுபவம் உள்ள, சர்வதேசத்துடன் பேசக்கூடியவருக்கு அந்தப் பதவியை வழங்க இணங்கினோம்.

நாடு மயான பூமியாகியிருக்கும்

அத்துடன் கோட்டாபய ராஜபக்‌ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகவும் நேரிட்டது. அன்று அவர் நாட்டை விட்டு போயிருக்காவிட்டால் அவர் இப்போது உயிருடன் இருந்திருக்கமாட்டார்.

அன்று கப்பல் மூலம் திருகோணமலைக்குப் போயிருக்காவிட்டால் அவர் உயிருடன் இருந்திருக்கமாட்டார். அப்போது ஏற்பட்ட ஜனாதிபதி பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க நாங்கள் இணங்கினோம்.

கோட்டாபய அன்று ஓடியிருக்காவிட்டால் இன்று உயிருடன் இருந்திருக்கமாட்டார்! - மொட்டு கட்சியினர் தெரிவிப்பு | Gotabaya Sri Lanka Podujana Peramuna Rohitha

இதன்படி ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்காது வேறு ஒருவர் பதவியேற்றிருந்தால் இந்த நாடு மயான பூமியாகியிருக்கும் என்பதுடன், அவர் போராட்டக்காரர்களின் பணயக் கைதியாகிருப்பார்.

அத்துடன் போராட்டக்காரர்கள் நாட்டைச் சீரழித்திருப்பார்கள். ஆனால், ரணில் விக்கிரமசிங்க புதிய இராணுவம், பொலிஸார் இன்றி, இருந்த பாதுகாப்புப் பிரிவினரைக் கொண்டே போராட்டத்தை நிறுத்த நடவடிக்கைகளை எடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US