மீண்டும் இலங்கை திரும்பும் கோட்டாபய: வேறு நாடுகளில் புகலிடம் கோருவதில் ஏற்பட்ட பெரும்சிக்கல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது 90 நாள் தாய்லாந்து விசா முடிந்ததும், எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேறு நாட்டில் தற்காலிக தங்குமிடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாததால், அவர் இலங்கை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச இன்று சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு தாய்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு சுற்றுலா விசாவில் 90 நாட்கள் தங்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா, மனிதாபிமான அடிப்படையில் ராஜபக்ச தாய்லாந்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார் என்று வெளிநாட்டு ஊடகங்களுக்கு நேற்று உறுதிப்படுத்தினார்.
மேலும் அது தற்காலிக தங்குமிடம் மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கை

கோட்டாபய 3 மாதம் தங்குவதற்காக, இலங்கை அரசாங்கம், நேரடியாக தாய்லாந்தின் அனுமதியை கோரியிருந்தது.
இதற்கிடையில் கோட்டாபய ராஜபக்சவின் பயண செலவுகளை அவரும் அவரது மகன் மனோஜ் ராஜபக்சவும் ஏற்றுக்கொண்டதாகவும், அவரையும் அவரது மனைவியையும் மாலைத்தீவுக்கு ஏற்றிச் சென்ற விமானப்படை விமானத்தை தவிர வேறு எந்த அரச நிதியும் இதுவரை பயன்படுத்தப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கில் தஞ்சம் கோரிய கோட்டாபய
வெளிநாடுகளில் முன்னாள் ஜனாதிபதியின் தங்குமிடத்திற்கு நிதியளிக்கும் பணக்கார
வர்த்தகர்களும் உள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவிக்கு
தாய்லாந்தில் எவ்வாறான தங்குமிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது இன்னும்
தெரியவில்லை.
இதேவேளை மத்திய கிழக்கில் கோட்டாபய ராஜபக்ச தஞ்சம் கோருவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவருக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று தெரியவருகிறது.
| கோட்டாபயவிற்கு அனுமதி கொடுத்தமை தொடர்பில் தாய்லாந்து அரசாங்கம் வெளியிட்ட அறிவித்தல் |
தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியத்திற்கு தலைமை தாங்க முடியுமா..! 47 நிமிடங்கள் முன்
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan