மீண்டும் இலங்கை திரும்பும் கோட்டாபய: வேறு நாடுகளில் புகலிடம் கோருவதில் ஏற்பட்ட பெரும்சிக்கல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது 90 நாள் தாய்லாந்து விசா முடிந்ததும், எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேறு நாட்டில் தற்காலிக தங்குமிடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாததால், அவர் இலங்கை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச இன்று சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு தாய்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு சுற்றுலா விசாவில் 90 நாட்கள் தங்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா, மனிதாபிமான அடிப்படையில் ராஜபக்ச தாய்லாந்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார் என்று வெளிநாட்டு ஊடகங்களுக்கு நேற்று உறுதிப்படுத்தினார்.
மேலும் அது தற்காலிக தங்குமிடம் மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கை

கோட்டாபய 3 மாதம் தங்குவதற்காக, இலங்கை அரசாங்கம், நேரடியாக தாய்லாந்தின் அனுமதியை கோரியிருந்தது.
இதற்கிடையில் கோட்டாபய ராஜபக்சவின் பயண செலவுகளை அவரும் அவரது மகன் மனோஜ் ராஜபக்சவும் ஏற்றுக்கொண்டதாகவும், அவரையும் அவரது மனைவியையும் மாலைத்தீவுக்கு ஏற்றிச் சென்ற விமானப்படை விமானத்தை தவிர வேறு எந்த அரச நிதியும் இதுவரை பயன்படுத்தப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கில் தஞ்சம் கோரிய கோட்டாபய
வெளிநாடுகளில் முன்னாள் ஜனாதிபதியின் தங்குமிடத்திற்கு நிதியளிக்கும் பணக்கார
வர்த்தகர்களும் உள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவிக்கு
தாய்லாந்தில் எவ்வாறான தங்குமிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது இன்னும்
தெரியவில்லை.
இதேவேளை மத்திய கிழக்கில் கோட்டாபய ராஜபக்ச தஞ்சம் கோருவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவருக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று தெரியவருகிறது.
| கோட்டாபயவிற்கு அனுமதி கொடுத்தமை தொடர்பில் தாய்லாந்து அரசாங்கம் வெளியிட்ட அறிவித்தல் |
தெஹ்ரான் இதுவரை கண்டிராத மிக உக்கிர வான்வழித் தாக்குதல்: தாழ்வாகப் பறந்த போர் வானூர்திகள் - அதிர்ந்த நகரம்
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
நாட்டின் முக்கிய நகரங்களில் நெருக்கடி! பணிக்கு வராதோருக்கு கடும் எச்சரிக்கை - வெளியான அதிரடி அறிவிப்பு
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam