கோட்டாபயவுக்கு குழிபறித்த அவரின் சகாக்கள் : திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்
கோட்டாபய ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவரின் நம்பிக்கைக்கு உரியவர்கள் அமெரிக்க புலனாய்வு பிரினருக்கு சார்பாக செயற்பட்டதாக அசங்க அபேகுணசேகர முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு கோட்டாபய ராஜபக்ச இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை.
அசங்க அபேகுணசேகர எழுதிய வின்ட்ஸ் ஒப் சேன்ஜ் (Winds of Change) (The Millennium Project, USA) நூலுக்காக மூன்று வருடங்கள் அதி முக்கிய நபர்களிடம் அவர் பேட்டி எடுத்துள்ளார்.
அந்த வகையில் கோட்டாபயவுடன் அவரின் வீட்டில் இரண்டு மணிநேரம் நடந்த பேட்டியில் இந்த தகவல்களை குறிப்பிட்டதாக அசங்க தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்ட கருத்துக்களில் இருந்து தொகுக்கப்பட்ட விடயங்கள்,
புலம்பெயர் தமிழர்களுடன் என்பிபி அரசு தெளிவான ஒரு உடன்பாட்டை கொண்டுள்ளது! விமல் வீரவன்சவின் பகிரங்கம்....
அரச சார்பற்ற அமைப்பினர்
கோட்டாபய ராஜபக்சவின் சிந்தனைக் குழுவாகக் கருதப்பட்ட Pathfinder Foundation எனற அரச சார்பற்ற அமைப்பு மிலிந்த மொரகொடவால் தொடங்கப்பட்டது. அதில் அங்கம் வகித்தவர்களே கோட்டாபயவின் சுற்றி இருந்ததாக அசங்க அபேகுணசேகர மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அட்மிரல் ஜயநாத் கொழம்பகே அந்த அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்தார். அட்மிரல் ஜயநாத் கொழும்பகே இலங்கை கடற்படையின் 18வது கடற்படை தளபதியாக பணியாற்றியதுடன், பின்னர் வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெளிவிவகார ஆலோசகராகவும் பணியாற்றியவர்.

மேலும், CIA-வால் பாதிக்கப்பட்ட மற்றொரு நபராக கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டவர் அவரது வெளிவிவகார ஆலோசகராக இருந்த அட்மிரல் ஜயநாத் கொழம்பகே ஆவார்.
தன்னை சிக்கலில் ஆழ்த்த நடவடிக்கை எடுத்தவர் இவரெனவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பிரதான பதவி வகித்தவர்களின் செயற்பாடுகள்
இந்தக் குற்றச்சாட்டில், கோட்டாபய ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்திலும் அதனைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியின் காலத்திலும் பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஜெனரல் கமல் குணரத்ன CIA-க்கு ஆதரவாக செயல்பட்ட நபராக பெயருடன் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், கோட்டாபய ராஜபக்ச தெரிந்தே CIA-வுடன் தொடர்புடைய நபரை பாதுகாப்புச் செயலாளராக வைத்திருந்தார் மற்றும் தொடர்ந்து பதவியில் வைத்திருக்க நடவடிக்கை எடுத்தார் என்ற குறிப்பு வெளிப்படுகிறது.

அசங்க அபேகுணசேகர வெளியிட்டுள்ள தகவலின்படி, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியின் முழு பாதுகாப்பு வளையமும் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான Central Intelligence Agency (CIA) கட்டுப்பாட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதை அவருக்கே நேரடியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
புடின் அமைதியை விரும்பவில்லை! மூன்றாம் உலகப் போருக்கு தயாராகுங்கள்: ஐரோப்பிய நாடொன்றின் அமைச்சர் News Lankasri
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam