கோட்டாபயவின் ஆலோசனையிலா சஹ்ரானுக்கு குண்டுகள் வழங்கப்பட்டன! பல திடுக்கிடும் தகவல்கள்...
கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வர திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சதித்திட்டம் ஒன்று இருந்ததாக இன்று வரை ஒரு சந்தேகம் இருக்கிறது.
அந்த சதித் திட்டத்தின் அடிப்படையில் அக்காலத்தில் உருவாக்கப்பட்ட இன, மத மோதல்களின் பின்னணியில் கோட்டாபயவுக்கு நெருக்கமாக இருந்த மூவர் அதன் கள செயற்பாடுகளை முன்னெடுத்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அவர்களில் ஒருவராக அக்கால இராணுவ புலனாய்வு பிரிவில் பணியாற்றிய கபில ஹெந்தாவிதாரண மற்றொருவர் கோட்டாவின் நெருங்கிய சகா சுரேஷ் சலே.
இவர்களின் கருத்தியல் வழிகாட்டியாக தன்னை தீவிரவாதம் தொடர்பான நிபுணர் என அறிமுகப்படுத்திக் கொள்ளும், கனடாவுக்கு செல்ல தடை செய்யப்பட்ட ரோஹான் குணரத்னவும் இந்த திட்டத்தில் இருக்கின்றார்.
‘அபுஹிந்த்’ என்ற சலே யார்?
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் விசாரணையில் சலே சாட்சிக் கூண்டில் அல்லாது குற்றவாளி கூண்டில் இருக்க வேண்டும் என பல தரப்புகள் வலியுறுத்தி வந்துள்ளன.

சலே தொடர்பான முக்கிய சாட்சிகள், தற்கொலைத் தாக்குதல்தாரி சஹ்ரானின் மனைவியின் வாக்குமூலங்களில் வெளிப்படையாக தெரிவிக்கப்படுகிறது.
‘அபுஹிந்த்’ என்ற பெயரில் சஹ்ரானுடன் தொடர்பில் இருந்த நபர் சுரேஷ் சலே என ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் விசாரணைகளில் சந்தேகிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மைத்திரிபால சிறிசேனவை ஏமாற்றிய விதம்
சஹ்ரான் உள்ளிட்ட கும்பலுக்கு 2010 முதல் பாதுகாப்பு அமைச்சின் இரகசிய கணக்குகள் மூலம் நிதி உதவி மற்றும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் வழங்கப்பட்டன.
தற்கொலைத் தாக்குதலுக்கான வெடிபொருட்கள், இலக்கு இடங்கள் மற்றும் திகதிகள் ஆகியன கோட்டாபய ராஜபக்ச அறிந்தே அனுப்பப்பட்டுள்ளன.
சலே மற்றும் ரோஹான் குணரத்ன கும்பல், சிறிசேனவின் நம்பிக்கைக்குரியவரான நிலந்த ஜெயவர்தனவைப் பயன்படுத்தினர்.நிலந்த மூலம், அவர்கள் சிறிசேனவுக்கு ஒரு வாக்குறுதியை அளித்தனர்.

அதாவது, தாக்குதல் வெற்றிபெற உதவி செய்தால், அதைத் தொடர்ந்து ஏற்படும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில், கோட்டாபய அரசாங்கத்தில் நிரந்தர பிரதமராக சிறிசேன நியமிக்கப்படுவார்.
சலே கொடுத்த கயிற்றை விழுங்கிய சிறிசேன, ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பு தந்திரமாக இந்தியாவிற்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் சென்றார்.
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள்.. ஒரே நாளில் 2 திருமணம்.. Cineulagam
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri