சுரேஷ் சலேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய்யானவையா! வெளிவந்துள்ள தகவல்கள்.....
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை இன்று அரசியல்அரங்கம் மற்றும் பொது மக்கள் மத்தியில் பல வாத விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் துவான் சுரேஷ் சலே எவ்விதத்தில் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதை நேற்று (25.02.2026) நடைபெற்ற பொலிஸ் ஊடக மாநாட்டில் கூட தெளிவான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.
ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக கேட்ட விடயம் நிரூபிக்க கூடிய காரணங்கள் இருக்கிறதாக என வினவிய போதும் விசாரணைகளில் சலே தொடர்பில் சாட்சியங்கள் இருப்பதாக கூறினர்.ஆனால் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணங்களை தெரிவிக்க தவறிவிட்டனர் பொலிஸார்.
நடுவீதியில் கைது செய்யப்பட்ட சுரேஷ் சாலே - மற்றொரு முன்னாள் சிஐடி அதிகாரி கைதாவாரா! நீதிமன்றில் முன்னிலையான அலி சப்ரி
'செனல் பே ' குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலேவுக்கு இருக்கும் பிரதான குற்றச்சாட்டு லண்டனில் இயங்கும் 'செனல் பே ' channel 4 தொலைக்காட்சியில் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஊடகப் பேச்சாளர் ஆசாத் மௌலானா வழங்கிய செவ்வியில் குறிப்பிட்ட விடயங்களாகும்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு முன்னர் புத்தளம் பிரதேசத்தில் ஒரு இடத்தில் சுரேஷ் சலே 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சஹ்ரான் அஷீம் உள்ளிட்ட குழுவினரை சந்தித்தார் என்று ஆசாத் மௌலானா சொன்ன விடயங்களே உருப்படியான சாட்சியங்களாக உள்ளன.

ஆனால் இவை உறுப்படுத்தப்பட்ட சாட்சியங்கள் அல்ல குற்றச்சாட்டு மட்டுமே. கோட்டாபயவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு சஹ்ரான் குழுவுடன் இணைந்து செயற்பட்டார் எனவும் கூறப்பட்டது.
மேலும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையானை சந்தித்துள்ளார் போன்ற விடயங்காளாகும்.
ஆதாரங்கள் அற்ற சம்பவங்கள்
ஆசாத் மௌலானா channel 4 தொலைக்காட்சிக்கு குறிப்பிட்ட விடயங்களை மறுத்துள்ள நிலையில் சலே, தொலைக்காட்சிக்கு கடிதம் ஒன்றை எழுதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,சஹ்ரான் அஷீம் உள்ளிட்ட குழுவினரை சந்தித்ததாக கூறப்படும் காலத்தில் தான் இலங்கையில் இருக்கவில்லை என அறிவித்துள்ளார்.

நல்லாட்சி காலத்தில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியின் சிபார்சில் மலேசியாவுக்கான இலங்கை தூவராலயத்தில் பணிக்கமர்த்தப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவர் இலங்கைக்கு 2017 ஆம் ஆண்டு வந்து ஒரு கிழமை தான் தங்கியுள்ளார்.2018 ஆம் ஆண்டு முழுவதும் தான் இலங்கைக்கு வரவில்லை என்கிறார்.
மலேசியாவில் இருந்த சலே
மலேசியாவில் அவர் தனியாக இருக்கவில்லை.தூதுவராயத்தில் இருந்ததால் மலேசிய புலனாய்வு துறையை சம்பந்தப்படுத்தி 2018 ஆம் ஆண்டு இவர் இலங்கைக்கு வந்தாரா என தேடிபார்க்கலாம்.
அடுத்த குற்றச்சாட்டு வெளிநாட்டு புலனாய்வு தகவல்களை தட்டிக்கலித்தார் மறைத்தார் என்பதாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் அரச புலனாய்வு பிரிவின் பிரதானியாக சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிலத்த ஜயவர்த்தனவே இருந்தார்.

சுரேஷ் சலேவுக்கு இது தொடர்பில் எவ்வித தொடர்பும் இல்லை.கோட்டாபய ஆட்சிக்கு வந்த பின்னரே சலே அரச புலனாய்வு பிரிவின் பிரதானியாக நியமிக்கப்படுகிறார். அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை.
மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் அவருக்கு மட்டுமல்ல புலனாய்வு துறையில் இருக்கும் எல்லோருக்கும் குற்றச்சாட்டு இருக்கிறது.விசாரணைகளை அடுத்தே எதையும் உருதியாக கூற முடியும்.
சுரேஷ் சாலேயின் கைதை வரவேற்கும் சஜித் அணி! நிலக்கரி ஊழலைத் திசைதிருப்பும் முயற்சியா என்றும் சந்தேகம்
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri