சுரேஷ் சாலேயின் கைதை வரவேற்கும் சஜித் அணி! நிலக்கரி ஊழலைத் திசைதிருப்பும் முயற்சியா என்றும் சந்தேகம்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டமையை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.
இருப்பினும், இந்தத் திடீர் கைது நடவடிக்கையானது தற்போது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலக்கரி ஊழல் விவகாரத்தை மக்கள் மத்தியிலிருந்து திசைதிருப்புவதற்காக அரசால் முன்னெடுக்கப்பட்ட ஒரு தந்திரோபாய முயற்சியோ என்ற பலத்த சந்தேகத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (25)புதன்கிழமை ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோரே மேற்படி விடயங்களைக் கூறியுள்ளனர்.
முஜிபுர் ரஹ்மான்
உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக சுரேஷ் சலே மீது நீண்டகாலமாகப் பாரதூரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. எனவே, அவரது கைது வரவேற்கத்தக்கது.

எனினும், இந்த விசாரணைகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் அமைய வேண்டும். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரியே தற்போதைய அரசின் பிரதி பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகிக்கின்றார்.
விசாரணைகள் சுயாதீனமாக நடைபெற வேண்டுமாயின், அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்." என்றார்.
சுஜித் சஞ்சய பெரேரா
"சுரேஷ் சலேயின் கைது நடவடிக்கையை நாம் கொள்கை ரீதியாக வரவேற்கின்றோம். ஆனால், தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலக்கரி கொள்வனவு மோசடியை மக்கள் மத்தியிலிருந்து மறைப்பதற்காகவே இந்தத் திடீர் கைது அரங்கேற்றப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது.

இவ்வாறான கைதுகளின் ஊடாக நிலக்கரி ஊழலை ஒருபோதும் மூடிமறைக்க முடியாது என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். இது குறித்தும் முறையான விசாரணைகள் அவசியம் என்றார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி உண்மை கண்டறியப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் வலியுறுத்தினர்.
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri