நாணய நிதியத்திடம் செல்லுங்கள்:அமைச்சர்களின் அழுத்தம் அதிகரிப்பு
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமையில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதை துரிதப்படுத்துமாறு அமைச்சரவை உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு கொடுக்கும் அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை தவிர ஏனைய அமைச்சர்கள் அனைவரும் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில் விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதை தான் தொடர்ந்தும் எதிர்த்து வருவதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும் அப்படியான அதிகாரபூர்வமான கோரிக்கை தமக்கு விடுக்கப்படவில்லை எனவும் உதவிகளை கோரினால், ஆராய தயாராக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri