கடந்த சில வாரங்களாக சர்வதேச ரீதியில் இலங்கைக்கு மிக முக்கியமான பேச்சுவார்த்தைகள்
இலங்கை மீது ஒவ்வொரு வருடமும் ஜெனீவா கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டுக்களுக்குப் பின்னால் உண்மையிலேயே மனித உரிமை மீறல் பற்றிய விவகாரமா அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த சில வாரங்களாக சர்வதேச ரீதியில் இலங்கைக்கு மிக முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
செப்டெம்பர் 12ஆம் திகதி ஐ.நா மனித உரிமைப் பேரவை ஜெனீவா நகரில் கூடுகின்றது. செப்டெம்பர் 21ஆம் திகதி ஐ.நா பொதுச் சபைக் கூட்டம் நியூயோர்க் நகரில் கூடுகின்றது.
இவ்விரண்டு மாநாடுகளிலும் நாம் எமது நாட்டிற்கான அனைத்து பிரயோசனத்தையும் பெற எதிர்பார்க்கின்றோம். எமது நிலைப்பாடு பற்றி விளாவாரியாக நாம் தெளிவுபடுத்தியிருக்கின்றோம்.
அந்த நாடுகளிலுள்ள இலங்கையின் தூதுவர்களான மொஹான் பீரிஸ் மற்றும் சி.ஏ சந்திரபிரேம ஆகியோர் மூலமாக இந்தத் தெளிவுபடுத்தலை செய்துள்ளோம்.
இதற்குப் பதிலாக கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதவர்களை தனித்தனியாக சந்தித்து ஜெனீவா கூட்டத்தொடருக்குத் தொடர்புடைய விடயங்களையும், தெளிவுபடுத்தலையும் வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் நான் செய்துள்ளேன். இது குறித்து நாம் நிச்சயம் கேட்க வேண்டிய கேள்விகள் சில உள்ளன.
இன்று உலகின் நிலைமை பற்றி நாம் சிந்தித்தால், குறிப்பாக தெற்காசிய வலயத்தில் பல்வேறு நெருக்கடிகள் உள்ளன. இந்த நிலைமை ஊடாக உலக மக்களுக்கு மேலதிகமான பாரதூரப் பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன.
மனிதப்படுகொலை, குண்டு வெடிப்புகள், நிலையற்ற தன்மை, துப்பாக்கி, ஆயுதப் பிரச்சினைகள், அகதிகள், தீவிரவாதம் என பிரச்சினைகளும் இந்த வலயத்தில் அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்களினால் ஏற்படுகின்றன.
இலங்கை என்பது அனைத்து நாடுகளுடனும் சிறந்த தொடர்பை வைத்துக் கொண்டு அமைதியாக இருக்கின்ற நாடாகும்.
எமது நாட்டினால் ஏனைய நாடுகளுக்கோ, எவருக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. எனினும் ஒவ்வொரு வருடமாக ஜெனீவா நகரில் இலங்கை பற்றி விமர்சித்து, பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமையிட்டு அதிர்ச்சியடைகின்றோம்.
இதற்கு உண்மையான காரணம் என்ன என்கின்ற பிரச்சினை எழுகின்றது. இதில் நீதி உள்ளதா? எடுகோள்கள் என்ன? பேச்சு நடத்தபல பிரச்சினைகள் உள்ள நிலையிலும் இலங்கையை தெரிவு செய்து ஏன் இவ்வாறு பேச்சு நடத்துகின்றார்கள் என்கின்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும் என நினைக்கின்றேன்.
உண்மையில் இது மனித உரிமைகளுடன் சம்பந்தப்பட்டதா அல்லது அதற்கு அப்பாலான அரசியல் நிகழ்ச்சி நிரலா? ஐ.நா ஜெனீவா பேரவை கடந்த மார்ச் மாதத்தில் கூடியது. இந்த 6 மாத இடைவெளியில் கோவிட் தொற்றின் கடுமையான நெருக்கடியை இலங்கை சந்தித்தது.
அந்த காலகட்டத்திலும் அனைத்து துறைகளிலும் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த அரசாங்கத்தினால் முடிந்த நிலையில் மிகவும் திறந்த மனதில் அதன் தெளிவுகளையும் முன்வைப்பதே எமது அபிப்பிராயமாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
