முல்லைத்தீவில் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி
முல்லைத்தீவு (Mullaitinu) முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் தவறான நடத்தைக்கு உள்ளான 14 வயதுடைய சிறுமி ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி கடந்த 11ஆம் திகதி (11.06.2024) முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் அவர் தவறான நடத்தைக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை
இந்நிலையில், சிறுமியிடம் சட்டவைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சிறுமியை கடந்த நான்காம் மாதம் முள்ளியவளை பகுதியினை சேர்ந்த இளைஞன் ஒருவர் தவறான நடத்தைக்கு உள்ளாக்கியமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சிறுமியின் வீட்டிலே இடம்பெற்றுள்ளது.
இளைஞனை இனம் காட்டிய சிறுமி தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு இளைஞனை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்ட வேளை குறித்த இளைஞன் கிராமத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி உளநல சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
