அடுத்த வருடம் பொதுத் தேர்தல்: மொட்டு தரப்பு திட்டவட்டம்

Ranil Wickremesinghe Prasanna Ranatunga IMF Sri Lanka
By Dharu Jun 27, 2024 07:01 AM GMT
Report

இலங்கையில் அடுத்த வருடம் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஸ்திரமற்ற நிலையில் இருந்த நாட்டை தற்போதைய ஜனாதிபதியால் ஸ்திரப்படுத்த முடிந்துள்ளதாகவும்  சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அரசியலமைப்பிற்கு புறம்பாக செயற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுககையில், 

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜப்பானின் வலியுறுத்தல்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜப்பானின் வலியுறுத்தல்

ஜனாதிபதித் தேர்தல்

“தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்ற விவாதம் நாட்டில் நிலவி வருகிறது. அத்துடன், பொதுத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா என்பது குறித்தும் கலந்துரையாடப்படுகிறது.

ஆனால் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்பதை கூற வேண்டும்.

அரசியலமைப்பு ரீதியாக தேவையானது ஜனாதிபதி தேர்தல். நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்படும் போது, அது நேரடியாக மக்களை பாதிக்கிறது. எனவே இந்த நாட்டுக்கு நிலையான அரசாங்கம் தேவை.

அடுத்த வருடம் பொதுத் தேர்தல்: மொட்டு தரப்பு திட்டவட்டம் | General Elections Date In Sri Lanka

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் பொதுத் தேர்தலை நடத்தலாம். அரசியலமைப்பிற்கு புறம்பாக செயற்பட்டு தேர்தலை ஒத்திவைக்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் உள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன் 2022 ஆம் ஆண்டு மே மாதம் இந்த நாட்டில் இருந்த நிலைமையை நாம் அனைவரும் புரிந்து கொண்டோம்.

மக்கள் வீதிகளில் எரிபொருள் வரிசை மற்றும் எரிவாயு வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ஒரு காலத்தில் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் போனது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கோவிட் தொற்றுநோய் சூழ்நிலையால் எங்களுக்கு ஏற்பட்ட வெளிநாட்டு நிதி பிரச்சினைகளால் நாங்கள் எதிர்கொண்ட சூழ்நிலையை நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அப்போது ரணில் விக்ரமசிங்க மட்டுமே சவாலை ஏற்றுக்கொண்டார். ரணில் விக்ரமசிங்கவிற்கு நாடாளுமன்றத்தில் சிறு குழுவாக நாங்கள் உதவி செய்தோம்.

அனுபவத்துடனும், முதிர்ச்சியுடனும், சவால்களை ஏற்கும் திறமையுடனும் அந்த வேலையைச் செய்வார் என்று நாங்கள் நம்பினோம். இரண்டு வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கும் போது, நாம் எதிர்பார்த்ததைச் செய்திருக்கிறார்.

இப்போது ரணில்தான் ஆள் என்ற கருத்து கிராம மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படியானால், அன்று நாங்கள் எடுத்த முடிவு சரியானது என்று நினைக்கிறோம்.

கடற்படைச் சிப்பாயின் இறுதி நிகழ்வில் பங்கேற்கவுள்ள யாழ் கடற்றொழிலாளர்கள்

கடற்படைச் சிப்பாயின் இறுதி நிகழ்வில் பங்கேற்கவுள்ள யாழ் கடற்றொழிலாளர்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

நாட்டுக்கு நல்ல செய்தியைக் கூறும்போது, இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நம்பிக்கையுள்ள மனிதனும் நல்லதைக் காண்கிறான்.

அதை நாங்கள் எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னொரு கூட்டத்தினர் நல்ல செய்தி சொன்னால் அதை பாசாங்குத்தனத்துடன் பார்க்கிறார்கள். நேற்றைய தினம் பேசுபொருளாகிய சுவரொட்டிகள் மூலம், நாட்டை நேசிக்கும் மக்களுக்கும், இந்த நாட்டை அழிக்க நினைக்கும் மக்களுக்கும் இடையிலான பிரிவினையை நாம் தெளிவாகக் காண்கிறோம்.

அடுத்த வருடம் பொதுத் தேர்தல்: மொட்டு தரப்பு திட்டவட்டம் | General Elections Date In Sri Lanka

சில எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் விடுதலை முன்னணியைப் போல ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் தலைவர்கள் தொழிற்சங்கங்களின் தலைவர்கள், நாடு நன்றாக இருக்கும் நேரங்களில் எப்போதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2023 மார்ச்சில் IMF ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முதல் தவணையை பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, இது போன்ற வேலைநிறுத்த அலைகளை ஏற்படுத்தியது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கிய நேரத்தில், கோவிட் தொற்றுநோய் காரணமாக நாட்டை மூட வேண்டியிருந்தது.

நாட்டை திறந்துவிட்டு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியதும் தொழிற்சங்கத்தினர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்து அவர்களை வரவிடாமல் தடுத்தனர்.

 கடந்த காலத்தில் இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் அரச ஊழியர்கள் சில சிரமங்களுக்குள்ளாகியிருந்ததாக நான் நம்புகிறேன். ஆனால் கோவிட் தொற்றுநோய்களின் போது நம் நாட்டின் தனியார் துறை கூட சரிந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஊழியர்களின் சம்பளம் கூட குறைக்கப்பட்டது.

பொது வேட்பாளரை நிறுத்துவது அபிவிருத்தியை பின்னடிக்கும் செயற்பாடு : திலீபன் எம்.பி

பொது வேட்பாளரை நிறுத்துவது அபிவிருத்தியை பின்னடிக்கும் செயற்பாடு : திலீபன் எம்.பி

சம்பள முரண்பாடு

ஆனால் அரசு அதைச் செய்யவில்லை. அரசு அரச ஊழியர்களை முடிந்தவரை பாதுகாத்தது. அதனைச் செய்த அரச அதிகாரிகள், தமது சம்பளத்தை இப்போதாவது அதிகரிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், இந்த சம்பளப் பிரச்சினைகளை ஆராய ஜனாதிபதி குழுவிருக்கும் போது, அந்தக் குழுவின் ஊடாக தமக்கு சாதகமான பதில் கிடைக்கும் எனத் தெரிந்தும், தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டங்களைச் செய்கிறார்கள்.

அடுத்த வருடம் பொதுத் தேர்தல்: மொட்டு தரப்பு திட்டவட்டம் | General Elections Date In Sri Lanka

அவர்களின் வேலையினால் தான் நாங்கள் இவ்வாறான ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறுகிறார்கள். இந்த சம்பள முரண்பாட்டை ஜனவரி 2025 க்குள் தீர்க்க ஒரு குழுவை அமைத்து 3 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு கூறியுள்ளோம்” என்றும்.

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US