இறக்குமதி கொடுப்பனவுகளுக்கான வர்த்தமானி அறிவித்தல்! அரசாங்கம் விளக்கம்
இறக்குமதி கொடுப்பனவுகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல என்று பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, இறக்குமதி தொடர்பான அந்நிய செலாவணி கொடுப்பனவுகளை முறையாகக் கண்காணிப்பதையும், முறையற்ற வழிகளில் அந்நிய செலாவணி நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதையும் இந்த ஒழுங்குமுறைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
நிறுவனங்களைப் பதிவு செய்வதற்கும் அந்நிய செலாவணியை மாற்றுவதற்கும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை ஒரு மறைப்பாகப் பயன்படுத்தியதாக சில தரப்பினர் மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்குகள் குறித்து சமீபத்தில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
புதிய விதி
புதிய விதிகளின்படி, இறக்குமதியாளர்கள் தங்கள் முகவரி, வங்கிக் கணக்கு விவரங்கள், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் கொடுப்பனவுகளுக்குப் பயன்படுத்தப்படும் நாணயம் உள்ளிட்ட விரிவான தகவல்களை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு இறக்குமதி தொடர்பான பரிவர்த்தனைக்கும் சம்பந்தப்பட்ட வங்கியால் ஒரு தனித்துவமான அடையாள எண் வழங்கப்படுகிறது.

இது, கொடுப்பனவுகளைத் துல்லியமாகக் கண்காணிக்கவும், அவற்றை இறக்குமதி நடவடிக்கைகளுடன் பொருத்தவும் அதிகாரிகளுக்கு உதவுகிறது.
இந்தச் சட்டங்களின் நோக்கம், முறையான வர்த்தக நடவடிக்கைகளில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதை விட, அந்நிய செலாவணி கொடுப்பனவு பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்துவதே ஆகும் என்றும் பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
விசேட வைத்திய நிபுணர்கள் கட்டணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு! வைத்திய நிபுணர் முன்வைக்கும் குற்றச்சாட்டு
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam