காசாவில் சிறுவர்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்படுவது இனப்படுகொலையே - ஐநா வெளியிட்டுள்ள அறிக்கை
காசாவில் பாலஸ்தீனச் சிறுவர்களை இஸ்ரேலியப் படைகள் திட்டமிட்டு இலக்கு வைத்துக் கொல்வது, அங்கு தொடரும் இனப்படுகொலையின் ஒரு பகுதியாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் பாலஸ்தீனச் சிறுவர்களுக்கு எதிராக இஸ்ரேல் நிகழ்த்தி வரும் சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து ஆராய்ந்து வெளியிடப்பட்ட இந்த ஐநா அறிக்கையில், இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைகள் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சர்வதேச சட்டங்கள்
ஒக்டோபர் 2025இல் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும்கூட, சர்வதேச சட்டங்களை மதிக்காமல் இஸ்ரேல் தொடர்ந்து சிறுவர்களைக் கொன்று வருவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த விசாரணைக் குழுவின் தலைவரான ஸ்ரீனிவாசன் முரளிதர் இதுகுறித்துத் தெரிவிக்கையில், காசாவில் ஒக்டோபர் 2023இல் போர் தொடங்கியதில் இருந்து பலியானவர்களில் சுமார் 30 சதவீதம் பேர் சிறுவர்கள் ஆவர்.
காசாவில் உள்ள மகப்பேறு மற்றும் நவதோட்டப் பராமரிப்பு மையங்களை இஸ்ரேல் திட்டமிட்டுத் தாக்கி வருவதன் மூலம் பாலஸ்தீனர்களின் மறு உற்பத்தித் திறனும், எதிர்காலச் சந்ததியின் வாழ்வாதாரமும் நேரடியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
இதன் காரணமாகக் கருச்சிதைவுகள் மற்றும் பிறவிக் குறைபாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. மேலும், இஸ்ரேலின் கடுமையான உதவிப் பொருள் முற்றுகையால் காசாவில் பசியால் சிறுவர்கள் உயிரிழப்பதோடு, தடுப்பூசி தட்டுப்பாட்டால் நோய்த்தொற்றுகளும் தீவிரமடைந்துள்ளன.
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan