போதைபொருள் விற்பனையில் ஈடுபட்ட பொதுஜன பெரமுண உறுப்பினர் கைது
கம்பளை நகர சபையின் பொதுஜன பெரமுண கட்சி சார்ந்த நகர்மன்ற உறுப்பினர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் பொதுஜன பெரமுண கட்சி சார்பில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளுடன் கம்பளை நகர சபைக்குத் தெரிவான உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
உறுப்பினர் கைது
குறித்த நபர் மீது இதற்கு முன்னரும் சட்டவிரோதமாக காய்ச்சியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்தநிலையில் நேற்றைய தினம்(27) கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri