கஞ்சா கடத்திய சந்தேகநபர்கள் இருவர் கைது
அனலைத்தீவு - கரம்பன் பகுதியில் கஞ்சா கடத்தி வந்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை அனலைத்தீவு - கரம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அனலைத்தீவு பகுதியில் இருவர் கஞ்சா கடத்தி வருவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர்கள் கடலில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து கஞ்சா பொதிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதன்போது மன்னார், அனலைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட கடற்படையினர் சந்தேகநபர்களை பொலிஸாரிடம் கையளிக்கவுள்ளதாக தெரியவருகிறது.