மன்னார் மாவட்டத்தில் தடையின்றி சகலருக்கும் எரிபொருளை வழங்க நடவடிக்கை
மன்னார் மாவட்டத்தில் தடையின்றி சகலருக்கும் எரிபொருளை வழங்க விசேட பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு , குறிப்பாக விவசாயம் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்று(17.3.2026) இடம்பெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் எரி பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
கலந்துரையாடல்
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் தடையின்றி சகலருக்கும் எரிபொருளை வழங்க விசேட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது மன்னார் பகுதியில் கடற்றொழில் பருவகாலம் ஆரம்பித்துள்ளதால், கடற்றொழிலாளர்களுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி வழங்குவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இதற்காக விசேட பொறிமுறை ஒன்று கடற்றொழில் அதிகாரிகளால் உருவாக்கப்பட்டுள்ளது, பெரும்போக அறுவடை பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதால், விவசாயிகளுக்குத் தேவையான எரிபொருளை விவசாயப் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam