வெள்ளிக்கிழமை விசேட விடுமுறையாக அறிவிக்கப்படாமை குறித்து அமைச்சரின் அறிவிப்பு
அரச சேவைகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக புதன்கிழமை விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்று (17.03.2026) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னரான ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை நாட்கள் வரும்போது, தொடர்ச்சியாக பல நாட்களுக்கு அலுவலகப் பணிகள் தடைப்படும்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுத்தல்
எனவே, விடுமுறையை புதன்கிழமைக்கு மாற்றுவதன் மூலம், அரசாங்கத்தின் செயல்பாடுகள் நீண்டகால தடங்கல்களின்றி தொடர முடியும்.

அரசாங்க அலுவலகங்களை முழுமையாக மூடாமல், பொதுச் சேவை வழங்குதலைத் தொடரவும், வாரம் முழுவதும் அத்தியாவசியப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam