எரிபொருள் தட்டுப்பாட்டால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!(photos)
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்
திருகோணமலை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதாக பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டால் கடல் தொழிலுக்குச் செல்வதில் கடற்றொழிலாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

திருகோணமலை - திருக்கடலூர், புல்மோட்டை, நிலாவெளி மற்றும் ஜமாலியா போன்ற பிரதேசங்களில் உள்ள கடற்றொழிலாளர்களின் படகுகள், வள்ளங்கள் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலகுவான வழிமுறைகள்
கடற்றொழிலாளர்கள் நீண்ட வரிசைகளில் எரிபொருளுக்காக காத்திருந்தாலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் சிரமமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்காக மீன்பிடித்திணைக்களம் இலகுவான வழிமுறைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடற்றொழிலாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam