எரிபொருள் விலை மாற்றம் தொடர்பாக வெளியான அறிவிப்பு
புதிய இணைப்பு
சிபெட்கோ எரிபொருள் சில்லறை விலைகளின் திருத்தம் தொடர்பாக ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
இன்று(31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த திருத்தங்கள் அறிவிக்கப்படலாம்
எரிபொருள் விலை
கடந்த மாத திருத்தத்தின் போது எரிபொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர்.
இதேவேளை, கடந்த மாத எரிபொருள் விலை திருத்தத்தின் படி 92 ஒக்டேன் ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் உயர்த்தப்பட்டிருந்தது.
92 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 293 ரூபாவிலிருந்து 305 ரூபாவாக உயர்த்தப்பட்டது.
மேலும், வெள்ளை டீசல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் உயர்த்தப்பட்டது.



