இலவச கண்சிகிச்சை திட்டத்தின் இரண்டாம் கட்டம் வவுனியாவில்(Photos)
வடக்கு மாகாணத்தில் கண் பார்வையில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கான சிகிச்சைகளை இலவசமாக வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் வவுனியாவில் முன்னெடுக்கப்படுகிறது.
இதன்படி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஆலோசனைக்கு அமைய, வவுனியா பொது வைத்தியசாலையில் குறித்த கண்புரை சத்திரசிகிச்சைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில், கண்புரை காரணமாக பாதிக்கப்பட்ட 1200 பேருக்கு இந்த இலவச சத்திர சிகிச்சை நடத்தப்படுகிறது.
இந்திய வைத்தியர்களின் வருகை
எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இந்த இலவச கண்புரை சத்திரசிகிச்சை முகாம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி வவுனியா, சிலாபம், முல்லைத்தீவு ஆகிய வைத்தியசாலைகளை சேர்ந்த மூன்று வைத்தியர்களுடன் இந்தியாவில் இருந்து வருகைதந்துள்ள மூன்று வைத்தியர்களும் இணைந்து இந்த சத்திர சிகிச்சைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்திய துணை தூதரக உதவி
மலேசியாவின் தனியார் நிதியம் ஒன்றின் அனுசரணையுடன் இந்த இலவச கண் சத்திரசிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது.
அத்தோடு இந்திய துணை தூதரகம், சுகாதார அமைச்சு ஆகியனவும் இந்த திட்டத்தை சிறப்பாக முன்னெடுப்பதற்கு உதவி நல்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
