சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் குறித்து பிரான்ஸ் எடுத்துள்ள தீர்மானம்
பிரான்சில் (France) உள்ள சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த கூடுதல் விமானங்களை ஏற்பாடு செய்யுமாறு பிரான்ஸ் உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே வறுமையிலிருக்கும் பிரான்சின் மயோட் (Mayotte) எனப்படும் தீவுகளுக்கு, ஆபிரிக்க நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக தப்பியோடி புலம்பெயர்வோர் வருதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வறுமையில் உள்ள மயோட் மக்களுக்கு மேலும் கடினமான சூழலை அவர்களின் வருகை உருவாக்குகிறது. அதனால், அங்கு குழப்பங்களும் பிரச்சினைகளும் நிலவுகின்றன.
விமானங்கள் ஏற்பாடு
ஆகவே, பிரான்ஸ் அரசாங்கம் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை மயோட்டிலிருந்து நாடுகடத்த திட்டமிட்டுள்ளது.
இந்நடவடிக்கைக்காக, கூடுதல் விமானங்களை ஏற்பாடு செய்யுமாறு மயோட்டில் உள்ள அதிகாரிகளுக்கு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Bruno Retailleau இந்த மாதம் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை காங்கோ நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்காக விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதே தனது முதன்மையான நோக்கம் எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





என்னது மயில் கர்ப்பமாக இல்லையா, சரவணன் எடுத்த முடிவு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri

இந்தியாவிற்கு கலக்கம் தரும் தகவல்... நெருங்கிய நண்பரிடமிருந்து மிகவும் மேம்பட்ட ஆயுதம் வாங்கிய பாகிஸ்தான் News Lankasri
