இணையம் - சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள்! பொதுமக்களுக்கான அறிவிப்பு
இணையத்தையும், சமூக ஊடகங்களையும் பயன்படுத்தும்போது நிதி மோசடிகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்றையதினம்(9) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பண மோசடிகள்
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இணையத்தளங்கள் மூலமாக நடைபெறும் மோசடி நடவடிக்கைகள், குறிப்பாக Telegram, WhatsApp போன்ற கணக்குகள் மற்றும் பிற சமூக வலைத்தளக் குழுக்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகி வருகின்றன.

இவ்வாறான சம்பவங்களில், மோசடியாளர்கள் பொதுமக்களை ஏமாற்றி அவர்களது வங்கி கணக்கு எண்கள், கடவுச்சொல் (User name / Password), QR குறியீடுகள் போன்ற ரகசிய பின்னர் நிகழ்நிலை (online) வேலைகளைப்பெற பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு கணக்குகளுக்கு பணம் செலுத்தும்படி வலைதளத்திலோ, பயன்பாடுகளிலோ மூலம் ஊக்குவித்து நிதி மோசடிகளில் ஈடுபடவதாக அறியமுடிகின்றது.
விசேடமாக சமீப காலங்களாக குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகவும் உயர்கல்வி வாய்ப்புகள் ஏற்பாடு செய்வதாக கூறி நபர்களை ஏமாற்றி பாரிய அளவிலான பண மோசடிகள் நிகழ்படுவதைப் பற்றி முறைப்பாடுகள் அதிகமாக பதிவாகுவதை அவதானிக்க முடிகின்றது.
எச்சரிக்கை
இந் நிலைமை அதிகமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பதிவாகி வருகின்றன.

ஆகையால், இணையத்தைப் பயன்படுத்தும் போது இத்தகைய மோசடிகள் தொடர்பாக எச்சரிக்கையாக செயல்படுமாறும், வெளிநாட்டுச் சேவைகள் அல்லது வேலைவாய்ப்புகளுக்கான வாய்ப்புகளை ஏற்குமுன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் போன்ற பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ அமைப்புகள் மூலம் மட்டுமே உறுதிசெய்யப்பட வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுவதோடு, இணையத்தளத்தை உபயோகிக்கும் போது பின்வரும் விடயங்கள் தொடர்பாக அறிந்து எச்சரிக்கையாக செயற்படுமாறு பொலிசார் பொதுமக்களிடம் வேண்டுகின்றனர்.
உபயோகிக்கும் சமூக ஊடகங்களான (Telegram / WhatsApp அல்லது வேறு) கணக்குகளில் தெரியாத நபர்கள் அல்லது தெரியாத சமூக ஊடகங்களின் ஊடாக பல்வேறு ஆதாயத்தினை பெற்றுத் தருவதாக குறிப்பிட்டு மேற்கொள்ளப்படும் மோசடிகளின் தூண்டுதல்களுக்கு மற்றும் அதன் செயல்களுக்கும் ஆளாகாதீர்கள்.
நிதி மோசடி
அறியாத நபர்கள் மற்றும் சமூக ஊடக அமைப்பு குழுக்கள் ஊடாக இடுகையிடும் இணைய நீடிப்புகள் மற்றும் ஸ்கேன் குறியீடுகளை பாவிப்பதை தவிர்க்கவும். அறியாத நபர்களின் கணக்குகளுக்கு நிதி பரிமாற்றம் செய்யாதீர்கள், உங்கள் வங்கி தகவல்களை பகிராதீர்கள், மேலும் உங்கள் வங்கி கணக்குகளை மற்றவர்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்காதீர்கள்.

உங்கள் கணக்கு எண்கள், கடவுச்சொற்கள் (passwords) அல்லது OTP குறியீடுகள் என்பவற்றை எக்காரணம் கொண்டும் யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
அறியாத நபர்கள் வழங்கும் தொலைபேசி பயன்பாடுகள் (apps) அல்லது இணைய இணைப்புகள் (links) பதிவிறக்கம் செய்யும் போது கவனமாக செயற்படுங்கள்; உங்கள் சாதனத்தின் (device) அணுகல் அனுமதிகளை வழங்காதீர்கள்.
இவ்வாறான நிதி மோசடிகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், ஊடக நிறுவனங்கள் ஊடாக பொதுமக்களை தெளிவுப்படுத்துமாறு இலங்கை பொலிசார் அன்புடன் அறியதருகின்றோம் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.