ட்ரம்பின் அதிரடி அறிவிப்பால் மகிழ்ச்சியில் அமெரிக்க மக்கள்
அதிக வருமானம் ஈட்டுபவர்களை தவிர பிற அனைத்து அமெரிக்க மக்களுக்கும் ரூ.1¾ லட்சம் (2 ஆயிரம் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் வரிக்கொள்கைகளைப் பற்றி கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் அறிவிப்பு
மேலும் அமெரிக்கா"உலகின் மிகவும் பணக்கார மற்றும் மதிக்கப்படும் நாடாக" மாறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆனால் அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வரும் ட்ரம்ப் அந்நாட்டின் மீது அதீத ஏற்றுமதி விதிக்கும் நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்தார்.
அமெரிக்க மக்கள்
மேலும் பிற நாடுகள் மீது விதிக்கப்படும் வரிகளில் இருந்து கிடைக்கும் வருவாயில் இருந்து உதிரி தொகையை நாட்டு மக்களுக்கே திரும்ப வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அதிக வருமானம் ஈட்டுபவர்களை தவிர பிற அனைத்து அமெரிக்க மக்களுக்கும் ரூ.1¾ லட்சம் (2 ஆயிரம் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அவற்றை நேரடியாக பயனாளர்களின் வங்கி கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனை சமூக வலைதளமான ட்ரூத் சோசியல் தளத்தில் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.