முன்னாள் எம்.பி கருணாகரம் ஜனாவின் வாகனம் விபத்து! ஒருவர் காயம்
மட்டக்களப்பு முன்னாள் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்தின் வாகனம் விபத்தில் சிக்கியதில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் இன்று(01) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தமிழரசுக் கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் இன்று(01.02.2025) காலை கேடிஎச் ரக வாகனமொன்றில் பயணித்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
திருகோணமலை உப்புவெளி வீதியில் சர்வோதயத்துக்கு முன் உள்ள பாதசாரி கடவையில் பொதுமக்கள் பாதையைக் கடப்பதற்காக முன்னாள் எம்.பியின் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, பின்னால் வந்த அதிக வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தி வைக்கப்பட்ட வேனில் பின் பக்கம் மோதி விபத்துக்கு உள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |