மகிந்தவுக்கு எதிராக சட்டத்தை பிரயோகிக்க தயாராகும் அரசு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. .
இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கான இல்லத்திலிருந்து வெளியேறுமாறு உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் அறிவிக்கப்பட்ட போதும், அதற்கான எந்தவித நடவடிக்கையும் மகிந்த தரப்பில் இதுவரை எடுக்கப்படவில்லை.
உத்தியோகபூர்வ இல்லம்
இந்நிலையில் அவரை கொழும்பு விஜேராம மாவத்தையில் உத்தியோகபூர்வ வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி அவர்களே இப்போதே வீட்டை விட்டு சென்று விட்டால் கௌரவமாக செல்ல முடியும். இல்லையேல் சட்ட ரீதியாக செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
