வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 38 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (31) இரவு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இந்த சிகரெட் கையிருப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
சந்தேகநபர் நேற்று இரவு 10.00 மணியளவில் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானமான EK-648 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
38,400 சிகரெட்டுகள் அடங்கிய 192 சிகரெட் அட்டைப்பெட்டிகள் அவரது பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரை பொலிஸ் பிணையில் விடுவிக்க பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், எதிர்வரும் ஜூன் மாதம் 05 ஆம் திகதி சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளுடன் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
