பிரதமர் ஹரிணியின் பதவி குறித்து எழுந்த சர்ச்சை.. வெளியான அரசாங்கத்தின் நிலைப்பாடு
பிரதமர் பதவியில் இருந்து ஹரிணி அமரசூரியவை நீக்குவதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் எழவில்லை, அந்தப் பதவியில் அவர் தொடர்வார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் பதவி பறிக்கப்படாது
பிரதமர் பதவியில் மாற்றம் வருமா, அவரிடமிருந்து கல்வி அமைச்சு பறிக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு விஜித ஹேரத், "கல்வி மறுசீரமைப்பு என்பது பரந்தப்பட்ட விடயமாகும். இதில் ஒரு அலகில்தான் பிழை இடம்பெற்றுள்ளது. அது பற்றி விசாரணை நடத்தப்படுகின்றது. எனினும், குறுகிய நோக்கில் இந்த விடயம் தொடர்பில் அரசியல் நடத்தப்படுகின்றது.
பிரதமர் பதவியில் மாற்றம் வராது. நாம் கூட்டுப் பொறுப்புடன் செயற்படுகின்றோம். கல்வி அமைச்சிலும் அவரே தொடர்வார். கல்வி மறுசீரமைப்பு என்பது சவால்மிக்க பணியாகும். அதனை நாம் செய்வோம். மக்கள் ஆணை அதற்கு உள்ளது." என பதிலளித்துள்ளார்.