பாணந்துறையில் ஒரே நேரத்தில் இடிந்து விழுந்த ஐந்து இரண்டுமாடிக்கட்டிடங்கள்
களுத்துறை - பாணந்துறை நகரின் பிரபலமான வீதியில் வரிசையாக அமைந்துள்ள 05 பழைய இரண்டுமாடிக் கட்டிடங்கள் இன்று (30) பிற்பகல் ஒரே நேரத்தில் இடிந்து வீழ்ந்துள்ளன.
குறித்த பகுதியின் வீதியின் இருபுறங்களிலும் வடிகால் அமைப்பு தயாரிப்பதற்காக மாநகர சபையினால் ஒப்பந்ததாரர் ஒருவர் நியமிக்கப்பட்டு, இன்று (30) பிற்பகல் முதல் பெக்ஹோ இயந்திரத்தின் உதவியுடன் வடிகால்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
நில அதிர்வு
இந்நிலையில், பெக்ஹோ மற்றும் மண் நிரப்பப்பட்ட லொறி ஆகிய கனரக வாகனங்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறியவுடன், குறித்த கட்டிடங்கள் ஒரே நேரத்தில் இடிந்து விழுந்துள்ளன.

பெக்ஹோ இயந்திரத்தால் ஏற்பட்ட அதிர்வே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், ஐந்து கட்டிடங்களின் கீழ் தளங்களில் பல் அறுவை சிகிச்சை மற்றும் ஒரு ஜவுளி கடை உள்ளிட்ட பல வர்த்தக நிலையங்கள் இருந்துள்ள நிலையில் அவை முற்றிலும் சேதமாகியுள்ளன.
அத்துடன், விபத்தின் போது அந்த ஐந்து வர்த்தக நிலையங்களில் இரண்டு மாத்திரமே திறந்திருந்ததாகவும் ஏனைய மூன்றும் மூடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விபத்தின் போது நபர்கள் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை எனவும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam