எரிவாயுவுக்கு பற்றாக்குறை! பிரதான நகரங்களில் காத்திருக்கும் மக்கள் - மீ்ண்டும் வரிசை யுகமா..
நாட்டில் எரிவாயுவிற்கான வரிசை தோற்றம் பெற்று வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பு, கண்டி, காலி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் லிட்ரோ மற்றும் லாப்ஸ் எரிவாயு இரண்டிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எரிவாயு பற்றாக்குறை..
சில பகுதிகளில் எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு அருகில் மிக நீணட வரிசையில் மக்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தையில் தற்போது கிடைக்கும் எரிவாயுவின் அளவு மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதாகவும், சில வர்த்தகர்கள் பற்றாக்குறையைப் பயன்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்வதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இருப்பினும், சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான அளவு இருப்பு ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளமை குறப்பிடத்தக்கது.
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri