ஆயிரம் முதல் ஒன்பதாயிரம் ரூபா வரை விற்பனையாகும் கணையான் வகை மீன்
அம்பாறை மாவட்டத்தில் கணையான் வகை மீன் அனங்கள் அதிகளவில் பிடிக்கப்படுவதுடன், மக்களும் இந்த மீன்களை கொள்வனவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவான கணையான் மீன் இனங்கள் அம்பாறை மாவட்டத்தின் பிராந்திய ஆற்றோரங்களில் பிடிபடுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கடலை நோக்கி ஓடும் நீரோடைகள் ஆறுகளில் இருந்து 3 வகையான கணையான் வகை மீன்கள் அதிகளவில் பிடிக்கப்படுகின்றன.
பிடிபடும் பாரிய மீன்கள்
சுமார் 5 முதல் 25 கிலோகிராம் எடையுள்ள பாரிய கணையான் மீன் இனங்களே இவ்வாறு மீனவர்களிடம் சிக்குவதாக தெரியவருகிறது.
இவ்வகையான மீன்கள் ஆயிரம் ரூபா முதல் ஒன்பதாயிரம் ரூபா வரையில் விற்பனையாகி வருவதுடன் பொதுமக்களும் ஆர்வத்துடன் கொள்வனவில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, நிந்தவூர், பாலமுனை, அட்டாளைச்சேனை பகுதிகளில் இவ்வாறான மீன் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.









மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
