முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாவது கோவிட் மரணம்
முல்லைத்தீவு மாவட்டத்தில முதலாவது கோவிட் மரணம் பதிவாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய நபரே மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
சிறுநீகர நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளதுடன் இவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 577 பேருக்கு இதுவரை கோவிட்
தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் 346 பேர் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு
திரும்பியுள்ளதுடன், 231 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.