வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த உணவகம்: தீயணைப்பு பிரிவினர் கடும் போராட்டம்(Photos)
வவுனியா நகரில் உணவகம் ஓன்று திடீரென தீப்பற்றி எரிந்து முழுமையாக நாசமாகியுள்ளது.
வவுனியா நகரில் கண்டி வீதியில் இரண்டாம் குறுக்குத்தெரு சந்திக்கு எதிரே இருந்த உணவகம் இன்று (19.07.2023) இரவு 8.20 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.
தீப்பரவலுக்கான காரணம்
குறித்த உணவகத்தில் கடமையாற்றுபவர் இதனை அவதானித்த நிலையில் வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கிய நிலையில் அங்கு வந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்த கடும் முயற்சி செய்த போதும் உணவகம் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
இருப்பினும் தொடர்ச்சியாக அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு தீப்பரவல் ஏற்படாத வண்ணம் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தீப்பரவலுக்கான காரணம் எரிவாயு சிலிண்டர் வெடிப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கிக்கப்படுவதுடன் வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



