2026 உலகக் கிண்ண விமர்சகர்களுக்கு ஃபிஃபா தலைவர் காட்டமான பதில்
2026 FIFA உலகக் கிண்ணம் குறித்து தொடர்ந்து விமர்சனம் முன்வைப்பவர்கள் பொய்களையும் வெறுப்பையும் பரப்புவதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ இணைந்து நடத்திய தொடரில் ஸ்பெயின் சாம்பியனானது. எனினும், அமெரிக்க விசா கட்டுப்பாடுகள், நடுவர் தீர்ப்புகள் மற்றும் வீரர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
2026 FIFA உலகக் கிண்ணம்
விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இன்ஃபான்டினோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள திறந்த மடலில் தெரிவித்திருப்பதாவது:
திரைக்குப் பின்னாலும், பேனா மற்றும் காகிதங்களுக்குப் பின்னாலும் அமர்ந்து கொண்டு பொய் செய்திகளையும் வெறுப்பையும் பரப்புபவர்களுக்கு நான் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் பின்னால் அமர்ந்திருக்கும் போது, ஃபிஃபாவில் உள்ள நாங்கள் தான் களத்தில் நின்று, கடினமாக உழைத்து உலகிலேயே மிகச்சிறந்த ஒரு விளையாட்டு நிகழ்வை வழங்கியிருக்கிறோம்.
நீங்கள் வெறுப்பிலும் விமர்சனங்களிலும் மூழ்கியிருந்ததால், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்கள் அனுபவித்த மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் பார்க்கத் தவறிவிட்டீர்கள்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்
இந்தத் தொடரில் எந்தவித வன்முறையோ அல்லது அசம்பாவிதங்களோ இன்றி 100% பாதுகாப்பும், மகிழ்ச்சியும் மட்டுமே நிறைந்திருந்தது.
இந்த உலகக் கிண்ணத் தொடரின் போது பல்வேறு விவகாரங்கள் பூதாகரமாயின. ஈரான், ஹைட்டி போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விசா வழங்குவதில் அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

சோமாலியாவைச் சேர்ந்த உலகக் கிண்ண நடுவர் உமர் அப்துல்காதிர் அர்தானுக்குச் செல்லுபடியாகும் விசா இருந்தபோதிலும் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஈரான் அணி தனது பயிற்சி முகாம் இடத்தை மெக்சிகோவின் டிஜுவானாவுக்கு மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.
பாதாள உலக குழுவினரை ஆட்டிப்படைப்பது ராஜபக்சர்களே..! காவடி ஊர்வலத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டம்
விசா ஒப்புதல்
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தலையீட்டிற்குப் பிறகு, அமெரிக்க வீரர் ஃபோலரின் பலோகனுக்கு விதிக்கப்பட வேண்டிய தடை இரத்து செய்யப்பட்டது பெரும் விவாதப் பொருளானது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இன்ஃபான்டினோ, "மில்லியன் கணக்கான மக்களுக்கு விசா ஒப்புதல் அளிக்கப்பட்டதை விட்டுவிட்டு, ஒரு சிலருக்கு விசா மறுக்கப்பட்டதை மட்டுமே பெரிதுபடுத்துகிறார்கள்.

ஈரான் அணி எந்தவித பிரச்சனையும் இன்றி அமெரிக்காவிற்குள் நுழைந்தது. கால்பந்து என்பது அமைதிக்கானது, அது அரசியலுக்கு அப்பாற்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்கள் மற்றும் விமர்சகர்கள் தங்கள் பேனாக்களையும் விசைப்பலகைகளையும் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, தொடரில் பங்கேற்று விளையாடிய அணிகளுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.