சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லவிருந்த 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்லவிருந்த 12 பேர் பருத்தித்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணற்காடு கடற்கரைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் வைத்து இன்று(30) அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத செயல்
பருத்தித்துறையை சேர்ந்த 8 ஆண்களும், 4 பெண்களுமே சட்டத்துக்கு புறம்பாக வெளிநாடு செல்ல முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வீட்டில் தங்க அனுமதித்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக செய்தி: ராகேஷ்
இலங்கையில் இருந்து சென்ற நான்கு படகுகளை கைப்பற்றிய அவுஸ்திரேலியா |