தீவிரமடையும் நோய் பரவல் - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கினால் வயிற்றுப்போக்கு மற்றும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
மத்திய, சபரகமுவ, மேற்கு மற்றும் தெற்கு ஆகிய நான்கு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலவச மருந்துகளை வழங்க நடவடிக்கை
அசுத்தமான நீரில் விளையாடுவதால் குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல், தொற்று மஞ்சள் காமாலை மற்றும் தொழுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமில் முத்துகுட எச்சரித்துள்ளார்.

அசுத்தமான நீரிலிருந்து டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதால், தடுப்பு சிகிச்சையை நாட வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனை கருத்திற்கொண்டு அருகிலுள்ள பொது சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திலிருந்து இலவச மருந்துகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், வயிற்றுப்போக்கு, தொற்று மஞ்சள் காமாலை, தொழுநோய், டெங்கு உள்ளிட்ட நோய்களின் அறிகுறிகளை உணர்ந்தால், அருகிலுள்ள அரசாங்க மருத்துவமனை அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.