2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சாதித்துக் காட்டிய பெண் பரீட்சார்த்திகள்
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைகளில் ஆண் பரீட்சார்த்திகளை விட பெண் பரீட்சார்த்திகள் அதிக சதவீதத்தில், பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சை எழுதிய அனைத்து பரீட்சார்த்திகளில் 64.73% பேர் பல்கலைக்கழக நுழைவுத் தகுதி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெண் பரீட்சார்த்திகள்
பெண் பரீட்சார்த்திகளில், 71.93% பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர், அதே நேரத்தில் ஆண் பரீட்சார்த்திகளில் 60.24% பேரே பல்கலைக்கழகத் தகுதியை பெற்றுள்ளனர்.

மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்த மாணவர்களின் சதவீதத்திலும் இதேபோன்ற போக்கு அவதானிக்கப்பட்டுள்ளது.
அதில், ஆண் பரீட்சார்த்திகளில் 13.87% மானோரும், பெண் பரீட்சார்த்திகளில் 8.6% மானோரும் மூன்று பாடங்களிலும் சித்தியடையவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri