2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சாதித்துக் காட்டிய பெண் பரீட்சார்த்திகள்
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைகளில் ஆண் பரீட்சார்த்திகளை விட பெண் பரீட்சார்த்திகள் அதிக சதவீதத்தில், பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சை எழுதிய அனைத்து பரீட்சார்த்திகளில் 64.73% பேர் பல்கலைக்கழக நுழைவுத் தகுதி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெண் பரீட்சார்த்திகள்
பெண் பரீட்சார்த்திகளில், 71.93% பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர், அதே நேரத்தில் ஆண் பரீட்சார்த்திகளில் 60.24% பேரே பல்கலைக்கழகத் தகுதியை பெற்றுள்ளனர்.

மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்த மாணவர்களின் சதவீதத்திலும் இதேபோன்ற போக்கு அவதானிக்கப்பட்டுள்ளது.
அதில், ஆண் பரீட்சார்த்திகளில் 13.87% மானோரும், பெண் பரீட்சார்த்திகளில் 8.6% மானோரும் மூன்று பாடங்களிலும் சித்தியடையவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam