பிள்ளைகளை கொலை செய்துவிட்டு இளம் தந்தை எடுத்த விபரீத முடிவு! பின்னணியில் வெளியான காரணம்
அரநாயக்க, பொலம்பேகொட பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்ட தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளின் மரணம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாய் மற்றும் தந்தைக்கிடையில் கடந்த சில காலமாக இடம்பெற்று வந்த தகராறு இந்த கொலைக்கான காரணம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
கொலைக்கான காரணம்
குழந்தைகளின் தாய் தனது கணவரின் எதிர்ப்பினை மீறி வெளிநாடு செல்ல முற்பட்ட போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் தனது மனைவியை தந்தை வீட்டிலிருந்து தன்னோடு வருமாறு பல தடவை அழைத்தும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னரே அவர் தனது ஆறு வயது மகனையும், ஒன்பது வயது மகளையும் கொன்றுவிட்டு கொதிகமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாவனல்லை பதில் நீதவான் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், கேகாலை பொது வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரியும் சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதற்கமைய, முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.





சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
