புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் தந்தை - மகன் கைது
புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை, மகன் என இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் புதுக்குடியிருப்பு விசுவமடு 10ஆம் கட்டை பகுதியில் உறவினர்களால் வீட்டுத் தளபாடங்கள், மோட்டார் சைக்கிள் என்பன களவாடப்பட்டிருந்தது.
மேலதிக விசாரணை
குறித்த திருட்டு சம்பவம் தாெடர்பாக வீட்டு உரிமையாளர்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் போடப்பட்ட முறைப்பாட்டுக்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் குறித்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் திருடிய பொருட்களுடன் நேற்றையதினம் (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய புன்னை நீராவி விசுவமடுவில் வசிக்கும் தந்தை (72வயது), மகன் (24வயது) கைது செய்யப்பட்டதுடன் , திருடப்பட்ட பாெருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் களவெடுத்த பொருட்களுடன் முற்படுத்தப்பட உள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan