அறுவடைக்கு எரிபொருளை பெற்றுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை (VIDEO)
கிளிநொச்சி - புளியம்பொக்கனை கமநல சேவை பிரிவுக்கு உட்பட்ட புளியம்போக்கணை நெத்தலி ஆற்றுப் பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எரிபொருளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் குறித்த பகுதி விவசாயிகள் தெரிவிக்கையில்,
குறித்த பகுதியில் வெறும் கழிவு நீரைக் கொண்டு தண்ணீர் பம்பி மூலம்150 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கமநல சேவைகள் பெறப்பட்ட சேதன உரத்தைக் கொண்டு நெற் பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயிர்கள் அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ள போதும் நேற்று முன்தினம் அறுவடை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எரிபொருளை பெற காத்திருப்பு
இருப்பினும் அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னரே எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் வாகனம் நிறுத்தப்பட்டு எரிபொருள் பெற முடியாத இருக்கிறது.
இன்னும் சிலநாட்களுக்குள் எரிபொருள் கிடைக்கப்பெறாவிட்டால் நெற்கதிர்கள் சேதமடைந்து போய்விடும்.
எனவே தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையைக் கருத்தில் கொண்டு எமது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எமக்கு எரிபொருளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.



