யாழில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!
யாழில்(Jaffna) இரண்டு நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம்(24) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அச்சுவேலி - தம்பாலை பகுதியை சேர்ந்த அப்புத்துரை கருணாகரன் (வயது 57) என்று தெரியவந்துள்ளது.
நிமோனியா காய்ச்சல்
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபருக்கு கடந்த 21ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
நிமோனியா காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri

இதுவரை தோல்வியையே சந்திக்காத கேப்டன்! எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா..எதிர்பார்ப்பில் WTC இறுதிப்போட்டி News Lankasri

நிபந்தனையுடன் சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை: ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..லண்டனில் தெரிவித்த அதிகாரிகள் News Lankasri
