மின்சார வேலியில் சிக்கி சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மரணம்!
காட்டு யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி சிவில் பாதுகாப்பு படை வீரரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இச்சம்பவம் நேற்றிரவு (07) ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்தவெவ பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான தியதித்தவெவ சிவில் பாதுகாப்பு காரியாலயத்தில் கடமையாற்றி வரும் சம்சுதீன் தையூப் (45வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மின்சார வேலி
மாடு கட்டுவதற்காக தனது வீட்டுக்குப் பின்னால் சென்றபோது யானைகளுக்கான மின்வேலியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
