இலங்கையில் மீண்டும் அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை..! அதிகளவில் உயரலாம்
இலங்கையில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் மீண்டும் உயரக்கூடும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவிவரும் நெருக்கடியின் விளைவாக விதிக்கப்பட்ட அதிக இறக்குமதி வரிகளால், வரவிருக்கும் இந்த விலை உயர்வு சமீபத்திய உயர்வை விட அதிகமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விலை மாற்றத்திற்கான பங்களிப்பு
உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், அதிகரித்து வரும் கப்பல் போக்குவரத்து செலவுகள் மற்றும் காப்பீட்டு பிரீமியங்கள் ஆகியவை இந்த விலை மாற்றத்திற்கு கணிசமாக பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விலை உயர்வு 5 முதல் 10 சதவீதம் வரை இருக்கலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் மதிப்பிடுவதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan