தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூன்றாவது பிணைமுறி விற்பனை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் மூன்றாவது பிணைமுறி விற்பனை இன்று நடைபெறவுள்ளது
ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர். கடந்த செப்டெம்பர் 25ஆம் திகதி ஒரு இலட்சத்து இருபதாயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பிணைமுறிகளை மத்திய வங்கி ஏலத்தில் விற்பனை செய்திருந்தது.
அதன் பிரகாரம் 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான பிணை முறிகள், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான பிணை முறிகள், 364 நாட்கள் முதிர்வு காலத்தைக் கொண்ட 10 ஆயிரம் மில்லியன் பிணை முறிகள் என்பன இதன் போது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
திறைசேரி பிணைமுறி
இந்நிலையில் ஒரு மாத காலத்திற்குள்ளாக இன்றைய தினம் இரண்டாவது தடவையாகவும் திறைசேரி பிணைமுறிகளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்றைய தினம் 85 பில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பிணைமுறிகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri