தனியார் பேருந்து நடத்துனரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய உரிமையாளர்
தனியர் பேருந்து ஒன்றில் நடத்துனராக கடமையாற்றி வந்த இளைஞர் ஒருவர் பணத்தை திருடியதாக கூறி உரிமையாளரால் தாக்கப்பட்ட சம்பவம் மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடியில் குறித்த சம்பவம் நேற்று(07.10.2024) இடம்பெற்றுள்ளது
இது தொடர்பில், தெரியவருவதாவது களுவாஞ்சிக்குடி மகிளுர் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையானரின் பேருந்தானது கல்முனை - மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவருகிறது.
அம்பாறை மத்திய முகாம்
குறித்த பேருந்தின் நடத்துனராக அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞன் ஒருவர் கடமையாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பேருந்தில் இருந்து பணத்தை திருடியதாக கூறி நடத்துனர் மீது அதன் உரிமையாளர் குற்றச்சாட்டு தெரிவித்து கடமையில் இருந்த அவரை சம்பவதினமான நேற்று பகல் ஒந்தாச்சிமடம் பிரதான வீதியிலுள்ள பாழடைந்த காணி ஒன்றிற்குள் இழுத்துச் சென்று அங்கிருந்த தென்னை மரத்தில் கட்டிவைத்து கட்டையால் தாக்கியுள்ளார்.

இதனை கண்ட பொதுமக்கள் கடும் கவலை தெரிவித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
களுவாஞ்சிக்குடி பொலிஸார்
இதன்போது சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருகைத்தந்த நிலையில் கட்டிவைத்து அடித்தவரை அங்கிருந்து மீட்டுள்ளனர்.

இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam