மதுபான உரிமம் வைத்திருப்பவர்களுக்கு இறைவரி திணைக்களத்தின் அறிவிப்பு
மதுபான உரிமம் வைத்திருப்பவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல், மதுபான உரிமங்களை புதுப்பிப்பதற்கு வருமான வரி, மதிப்பு கூட்டப்பட்ட வற் வரி மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி ஆகியவற்றின் வரி அனுமதி சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய முறையின் கீழ், உரிமம் வைத்திருப்பவர்களின் புதுப்பிக்கப்பட்ட வரி அனுமதிச் சான்றிதழ்கள் நேரடியாக மதுவரித்திணைக்களத்துக்கு அனுப்பப்படும்.
உரிய பதிவுகள்
அதன்படி, 2024 செப்டெம்பர் 30ஆம் திகதி அன்று முடிவடைந்த காலாண்டுகளுக்கான வற் மற்றும் வருமான வரிக் கணக்குகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

மூன்று வரிகளைத் தவிர, வரி வைத்திருப்பவர் வேறு ஏதேனும் வரிகளுக்குப் பதிவு செய்திருந்தால், அதற்குரிய பதிவுகளையும் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் உள்நாட்டு இறைவரித்திணைக்களம் அறிவித்துள்ளது.
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri