ஐரோப்பிய ஒன்றியம் மேலும் இலங்கைக்கு வழங்கிய உதவி!
'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு மேலதிகமாக யூரோ ஒரு மில்லியனை மனிதாபிமான உதவியாக ஒதுக்கியுள்ளது.
மனிதாபிமான பங்காளர்களுடன் இணைந்து வழங்கப்படும் இந்த உதவி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை சேவைகளை வழங்க பயன்படுத்தப்படும்.
மேலதிக யூரோ மில்லியன் உதவி
'டித்வா' சூறாவளிக்குப் பிறகு, பொறியியல், தொழில்நுட்ப உதவி மற்றும் பொருள் உதவி உட்பட, ஐரோப்பிய ஒன்றியமும் அதன் பங்காளர்களும் இதற்கு முன்னர் இலங்கை மக்களுக்கு 2.35 மில்லியன் யூரோவை உதவியாக வழங்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் உலகின் முன்னணி மனிதாபிமான உதவி வழங்குநர்களாக செயற்படுகின்றனர்.

உலகளவில் மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களைச் சமாளிக்க உதவுவதும், பேரழிவுகள் மற்றும் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் நேர்மை மற்றும் மனித கண்ணியத்தைப் பாதுகாப்பதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 15 மணி நேரம் முன்
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam