இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை நீடிப்பு!
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள், ஐக்கிய அரபு அமீரகத்துக்குள் நுழைவதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 28 ஆம் திகதிவரை இவ்வாறு தடை நீடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளால் தமக்கு விடுக்கப்பட்டுள்ளதாக டுபாயை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 14 நாட்களுக்குள் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்குச் சென்ற பயணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எந்த இடத்துக்கும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ், அமீரக கோல்டன் வீஸா வைத்திருப்போருக்கும் இராஜ தந்திரிகளுக்கும் அமீரகத்துக்குள் நழையத் தடையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam